மரம் வெட்டுவதை தடுத்த கணவர் -கர்ப்பிணி மனைவிக்கு குழந்தைகள் முன்பு நடந்த கொடுமை.

 

மரம் வெட்டுவதை தடுத்த கணவர் -கர்ப்பிணி மனைவிக்கு குழந்தைகள் முன்பு நடந்த கொடுமை.

மரம் வெட்ட எதிர்ப்பு தெரிவித்தவரின் கர்ப்பிணி மனைவியை குழந்தைகள் முன்பே பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது

மரம் வெட்டுவதை தடுத்த கணவர் -கர்ப்பிணி மனைவிக்கு குழந்தைகள் முன்பு நடந்த கொடுமை.

மத்திய பிரதேசத்தின் சதர்பூர் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் தன்னுடைய கணவரோடும் குழந்தைகளோடும் ஒரு பண்ணையில் வேலை செய்து வந்தார் .அவரின் கணவரும் அதே பண்ணையில் ஒரு மரம் வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .இந்நிலையில் அந்த பண்ணையில் நிறைய மரங்கள் இருந்தன.அதற்குள் இருக்கும் சில மரங்களை வெட்டுவதற்கு அந்த தொழிலாளி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் .மேலும் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார் இதனால் கோவப்பட்ட சிலர் அந்த தொழிலாளியை அடித்து உதைத்துள்ளார்கள் .பிறகு அந்த தொழிலாளியின் கர்ப்பிணி மனைவியை அவரின் குழந்தைகளின்  கண் முன்னாடியே கற்பழித்துள்ளனர் .அதன் பிறகு அந்த குடும்பத்தையே நாலு நாட்கள் ஒரு இடத்திற்கு கடத்தி சென்று அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர் .இந்த விஷயம் அந்த பகுதியில் உள்ள ஒரு பத்திரிகையாளர் மூலம் போலீசுக்கு தெரிய வந்தது .அதனால்  போலீசார் அதிரடியாக அந்த குடும்பத்தினரை அடைத்து வைத்துள்ள இடத்திற்கு சென்று அவர்களை மீட்டனர் .பிறகு போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்