மருத்துவமனை செல்ல அச்சம்… உறவினர்கள் பிரசவம் பார்த்ததில் தாயும், சேயும் பலி…

 

மருத்துவமனை செல்ல அச்சம்… உறவினர்கள் பிரசவம் பார்த்ததில் தாயும், சேயும் பலி…

திருவள்ளூர்

சோழவரம் அருகே மருத்துவமனைக்கு செல்ல பயந்து உறவினர்களே பிரசவம் பார்த்தால் தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ள புதிய எருமை வெட்டிப்பாளையத்தில் உள்ள செங்கல் சூளையில், பீகாரை சேர்ந்த கோபு என்பவர் தங்கி பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பூஜா (20). நிறைமாத கர்ப்பிணியான இவர் பாடியநல்லுார் அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப் பட்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற அச்சமடைந்த அவர், யாருக்கும் தெரிவிக்காமல் செங்சூல் சூளைக்கு திரும்பினார்.

மருத்துவமனை செல்ல அச்சம்… உறவினர்கள் பிரசவம் பார்த்ததில் தாயும், சேயும் பலி…

அன்றிரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், உடனிருந்தவர்களே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், சிறிது நேரத்தில் தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து, அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருவரையும் அடக்க செய்ய உறவினர்கள் முயன்றனர்.

தகவல் அறிந்த சோழவரம் போலீசார், விரைந்து சென்று தாய் மற்றும் சேயின் உடலை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற பயந்து, உறவினர்களே பிரசவம் பார்த்தால் தாயும், சேயும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.