கார் மோதி விபத்து: கண்ணிமைக்கும் நொடியில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி!

 

கார் மோதி விபத்து: கண்ணிமைக்கும் நொடியில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி!

வில்லிவாக்கம் அருகே கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண் உயிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனியில் வசித்து வந்த பெண் கௌசிபீ. இவர் 4 மாதம் கர்ப்பிணியாக இருந்த நிலையில், நேற்று செக் அப்-க்கு சென்று விட்டு தனது கணவரின் கடைக்கு சென்றுள்ளார். அங்கு கணவரிடம் ஸ்கேன் அறிக்கையை காட்டி விட்டு பின்னர் பீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அச்சமயம் அவ்வழியே வந்த வருமானவரித்துறை வாகனம் ஒன்று கௌசிபீ மீது மோதியுள்ளது.

கார் மோதி விபத்து: கண்ணிமைக்கும் நொடியில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி!

இந்த திடீர் விபத்தில், சாலையில் இருந்து சில அடி தூரம் தூக்கி வீசப்பட்ட கௌசிபீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அப்பகுதி மக்கள் காரை, நிறுத்த முயன்ற போது காரை ஓட்டி வந்த பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கி தப்பியோடியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கௌசிபீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.