கர்ப்பிணியை சுட்டுக் கொன்ற கணவன்… கள்ள உறவால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

 

கர்ப்பிணியை சுட்டுக் கொன்ற கணவன்… கள்ள உறவால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

டெல்லியில் கர்ப்பிணியாக இருந்த மனைவியை கணவன் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி நிசாமுதீன் பகுதியில் வசித்து வந்தவர் சாய்னா. இவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கர்ப்பிணியாக இருந்த சாய்னா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு சாய்னா தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த அவரது கணவன் வாசிம் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சாய்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கர்ப்பிணியை சுட்டுக் கொன்ற கணவன்… கள்ள உறவால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

சாய்னாவை வாசீம் கொலை செய்ய முயன்ற போது அருகிலிருந்த நபர் ஒருவர் வாசீமை தடுத்துள்ளார். அந்த நபரையும் வாசீம் சுட்டுக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சாய்னாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கர்ப்பிணியை சுட்டுக் கொன்ற கணவன்… கள்ள உறவால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சாய்னா சிறைக்கு சென்ற பிறகு வாசீம் சாய்னாவின் சகோதரியுடன் தவறான தொடர்பில் இருந்ததும் சாய்னா சிறையில் இருந்து வந்துவிட்டதால் அவரது சகோதரியுடன் பழக முடியாத ஆத்திரத்தில் கொலை செய்ததும் அம்பலமாகியுள்ளது. அதனிடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வாசீமை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.