குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் தற்கொலை!

 

குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் தற்கொலை!

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஜெய்மாதா நகரை சேர்ந்தவர் திலீபன் (28). கூலி தொழிலாளி. இவரது மனைவி காவ்யா(21). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது, காவ்யா 6 மார்ச் கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்த நிலையில், மதுப் பழக்கத்திற்கு அடிமையான திலீபன், மது அருந்திவிட்டு சென்று அடிக்கடி காவ்யாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் தற்கொலை!

நேற்று முன்தினம் தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த காவ்யா இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவ்யாவின் பெற்றோர், அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.