‘கொரோனாவால் கர்ப்பிணி உயிரிழப்பு’.. இரட்டை குழந்தைகளை பத்திரமாக காப்பாற்றிய மருத்துவர்கள்!

 

‘கொரோனாவால் கர்ப்பிணி உயிரிழப்பு’.. இரட்டை குழந்தைகளை பத்திரமாக காப்பாற்றிய மருத்துவர்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று பரவியதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் அதிகமாக பரவியிருக்கும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டிருப்பினும், பாதிப்பு குறைய வில்லை. ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு உயிர் பிழைத்துக் கொள்ள சென்னையில் இருந்து வெவ்வேறு மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மூலமாக கொரோனா அதிகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த கொடிய நோயான கொரோனாவால் காவலர்களும், மருத்துவர்களும், கர்ப்பிணிகளும், குழந்தைகளும் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

‘கொரோனாவால் கர்ப்பிணி உயிரிழப்பு’.. இரட்டை குழந்தைகளை பத்திரமாக காப்பாற்றிய மருத்துவர்கள்!

இந்த நிலையில் மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 45 வயதான கர்ப்பிணி இன்று பேறுகாலத்தின் போது சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். ஆனால் அவரது இரட்டை குழந்தைகளை மருத்துவர்கள் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர். அந்த குழந்தைகளுக்கு கொரோனா பரவல் இல்லை என்று கூறப்படுகிறது. மதுரையில் கொரோனாவால் முதல் கர்ப்பிணி பெண் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.