ஜெ.அன்பழன் உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன்! – எடப்பாடி பழனிசாமி ட்வீட்

 

ஜெ.அன்பழன் உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன்! – எடப்பாடி பழனிசாமி ட்வீட்

கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல் நலம் பெற்ற பிரார்த்தனை செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜெ.அன்பழன் உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன்! – எடப்பாடி பழனிசாமி ட்வீட்

இது தொடர்பாக பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள ட்வீடில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.அன்பழகன் அவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தேன். அவர் விரைவில் குணமடைந்து பூரணநலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஜெ.அன்பழன் உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன்! – எடப்பாடி பழனிசாமி ட்வீட்
முன்னதாக ரெலா மருத்துவமனை தலைவர் டாக்டர் முகமது ரெலாவைத் தொடர்புகொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அன்பழகன் உடல் நலம் பற்றி விசாரித்தார். அவருக்குத் தேவையான உதவிகளைத் தமிழக அரசு சார்பில் வழங்கத் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.