இயற்கை முறையில் மண்ணை வளப்படுத்திய ஞானி- நம்மாழ்வருக்கு, சத்குரு புகழாரம்!

 

இயற்கை முறையில் மண்ணை வளப்படுத்திய ஞானி- நம்மாழ்வருக்கு,  சத்குரு புகழாரம்!

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வரின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஈஷா யோகா மையம் சார்பில் மரக்கன்றுகள் நட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டன. இது தொடர்பாக ஈஷா யோகா நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளின் மூலம் மண்ணை வளப்படுத்தும் ஞானம் மிகுந்த ஒரு எளிய மனிதர்” என புகழாரம் சூட்டியுள்ளார்.

நாடோடியான துறவியாகவும் நெறிசாரா கதைகள் சொல்பராகவும் போற்றப்பட்டவர் நம்மாழ்வர் என்றும், ஈஷா விவசாய இயக்கத்தின் தொடக்க காலங்களில் அவர் ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன் நினைவுகூர்கிறோம் எனவும் சத்குரு பதிவிட்டுள்ளார்.

இயற்கை முறையில் மண்ணை வளப்படுத்திய ஞானி- நம்மாழ்வருக்கு,  சத்குரு புகழாரம்!

இது தொடர்பாக ஈஷா விவசாய இயக்கம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில், நம்மாழ்வார் விட்டு சென்ற பணியை ஈஷா விவசாய இயக்கம் அவர் காட்டிய வழியில் தொடர்ந்து தீவிரமாக செயலாற்றி வருகிறது. நம்மாழ்வார் உயிருடன் இருந்த காலத்தில் ஈஷாவின் சுற்றுச்சூழல் பணிகள் அனைத்திலும் அவர் மிகுந்த ஆர்வத்துடன் இணைந்து செயல் புரிந்தார். குறிப்பாக, மண்ணை வளமாக வைத்து கொள்ள நாட்டு மாடுகளும், மரங்களும் அவசியம் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன் அடிப்படையிலும், விவசாய நிலங்களில் மரங்கள் நடும் பணியை ஈஷா பெரியளவில் ஊக்குவித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

இயற்கை முறையில் மண்ணை வளப்படுத்திய ஞானி- நம்மாழ்வருக்கு,  சத்குரு புகழாரம்!

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவால் தொடங்கப்பட்ட இந்த விவசாய இயக்கம் 2015-ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் மாதந்தோறும் இயற்கை விவசாய களப் பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதுவரை 8,700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது.