வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஜோதிடர் குறித்து போஸ்டர்

 

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஜோதிடர் குறித்து போஸ்டர்

கோவையில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பிரபல ஜோதிடர் குறித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஜோதிடர் குறித்து போஸ்டர்

கோவை காந்திபுரம் அடுத்த டாடாபாத் 7வது வீதியில் ராசிக்கற்கள் விற்பனை செய்து வரும் நிறுவனம் நடத்தி வருகிறார் ஜோதிடர் கல்பனா. இவருக்கு சொந்தமாக பஞ்சரத்னா ஜெம்ஸ் என்ற பெயரில் ராசி கற்கள் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது.

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஜோதிடர் குறித்து போஸ்டர்
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஜோதிடர் குறித்து போஸ்டர்

இந்த நிலையில், கல்பனா அவரது கணவர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மகன் ரித்தீஸ் ஆகியோர் மீது வரதட்சனை புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நகரத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஜோதிடர் குறித்து போஸ்டர்

மக்கள் கவனத்திற்கு என்கிற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ஜோதிடர் கல்பனாவுக்கு சொந்தமான பஞ்சரத்னா ஜெம்ஸ் பெயர் முகவரியுடன் ஃப்.ஐ‌.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. யார் ஒட்டியது என்பது குறித்து அப்பகுதியினர் விசாரித்து வருகின்றனர்.

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஜோதிடர் குறித்து போஸ்டர்