ஒரே நாடு ஒரே கல்வி என்று கூறுபவர்கள் ஒரே ஜாதி என ஏன் கூற மறுக்கிறார்கள்? – பொன்முடி

 

ஒரே நாடு ஒரே கல்வி என்று கூறுபவர்கள் ஒரே ஜாதி என ஏன் கூற மறுக்கிறார்கள்? – பொன்முடி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி உளறல் பதிலையே அளித்துவருகிறார் என திமுக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய, “ஒரே நாடு, ஒரே கல்வி என்று கூறுபவர்கள் ஒரே ஜாதி என ஏன் கூற மறுக்கிறார்கள். தனியார் கல்வி நிறுவனங்கள் கொள்ளையடிக்க தான் நீட் தேர்வு. இன்று நடந்த மாணவி தற்கொலை குறித்து கருத்து தெரிவித்த முதல்வர், நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சிப்போம் என்று கூறுகிறார். நாளை தேர்வை வைத்துக் கொண்டு இவர்கள் எப்படி ரத்து செய்வார்கள்.

ஒரே நாடு ஒரே கல்வி என்று கூறுபவர்கள் ஒரே ஜாதி என ஏன் கூற மறுக்கிறார்கள்? – பொன்முடி

வருகின்ற சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிச்சயம் குரல் கொடுப்போம். தற்போது உள்ள முதல்வர் கொரோனாவாக இருந்தாலும் சரி நீட் ஆக இருந்தாலும் சரி உளறல் பதிலையே அளித்து வருகிறார்” எனக் கூறினார்.