தமிழக மக்களுக்கு திமுக ’அல்வா’ கொடுத்து வருகிறது- பொன்.ராதா

 

தமிழக மக்களுக்கு திமுக ’அல்வா’ கொடுத்து வருகிறது- பொன்.ராதா

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக கோடான கோடி தமிழக மக்களுக்கும் அல்வா கொடுத்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு திமுக ’அல்வா’ கொடுத்து வருகிறது- பொன்.ராதா

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “மத்திய அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற வேண்டும், சட்டசபையை நாடக மேடையாக திமுக பயன்படுத்தி வருகிறது. மத்தியில் அதிகாரம் இருந்தும் ஓபிசி இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற விடாமல் திமுக திட்டமிட்டே நிறுத்தி வைத்திருந்தது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக கோடான கோடி தமிழக மக்களுக்கும் அல்வா கொடுத்து வருகிறது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு, பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டையும் அமல்படுத்தியதன் மூலம் பிரதமர் மோடி சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளார். மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முடியாது. அத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு விடாது. ஏனெனில் வாங்குவங்கி அரசியலை காங்கிரஸை போல பாஜக ஒருபோதும் கையில் எடுக்காது. திமுகவும், காங்கிரஸும் தான் நீட் தேர்வை கொண்டுவந்தது. நீட் தேர்வு பற்றி பேச திமுக காங்கிரசுக்கு எந்த தகுதியும் அல்ல” எனக் கூறினார்.