பொள்ளாச்சி ஜெயராமன் மகனை கைது செய்ய உத்தரவு!

 

பொள்ளாச்சி ஜெயராமன் மகனை கைது செய்ய உத்தரவு!

அடிதடி வழக்கில் சிக்கிய பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் உட்பட 7 பேரை கைது செய்ய கோவை எஸ்.பி. ஆணை பிறப்பித்துள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன் மகனை கைது செய்ய உத்தரவு!

பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்தில் திமுக பரப்புரை செய்த நிலையில் அதிமுகவுக்கும் , திமுகவுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் கிரி மற்றும் உதயகுமார் ஜெகதீஷ் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து இருதரப்பும் மீது வடக்கிபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒக்கிலிபாளையம் ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் , ஜெயராமன் மகன் பிரவீன் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் அதிமுகவினர் அளித்த புகாரின் பேரில், திமுக வேட்பாளர் வரதராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி ஜெயராமன் மகனை கைது செய்ய உத்தரவு!

இந்நிலையில் ஒக்கிலிபாளையத்தில் மார்ச் 28ல் நடந்த அடிதடி வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் மகனை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் உட்பட 7 பேரை கைது செய்ய எஸ்.பி. ஆணை பிறப்பித்துள்ளார். திமுக தரப்பில் 4 பேரையும் கைது செய்ய கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.இந்த விவகாரம் திமுக ,அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.