பொள்ளாச்சி ஜெயராமன் மகன் குறித்து பேஸ்புக்கில் அவதூறு… திமுகவை சேர்ந்த 2 பேர் கைது…

 

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் குறித்து பேஸ்புக்கில் அவதூறு… திமுகவை சேர்ந்த 2 பேர் கைது…

கோவை

சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான செய்திகளை பரப்பியதாக திமுகவை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

கோவை மாவட்ட அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சதீஷ்குமார் என்பவர், சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி காவல் நிலைய போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், திமுக பொள்ளாச்சி நகர துணை செயலாளர் நாகராஜ் மற்றும் சுதர்சன் ஆகியோர், பேஸ்புக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை குறித்து அவதூறான செய்திகளையும், புகைப்படங்களையும் பரப்பியதாகவும், மேலும், இதனை தட்டிக்கேட்ட தனக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி இருந்தார்.

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் குறித்து பேஸ்புக்கில் அவதூறு… திமுகவை சேர்ந்த 2 பேர் கைது…

புகாரின் பேரில் திமுக நிர்வாகிகள் நாகராஜ் மற்றும் சுதர்சன் மீது அவதூறு செய்தி பரப்புதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.