‘ஜெயலலிதா மரணத்திற்கு அவங்க தான் காரணம்’ – பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு!

 

‘ஜெயலலிதா மரணத்திற்கு அவங்க தான் காரணம்’ –  பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் திமுக என்றே கட்சியே இருக்காது என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்தார்.

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில், அரசு சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் அம்மா மினி கிளினிக்கை பொள்ளாச்சி ஜெயராமன் துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அங்கிருந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கியதோடு, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் கொடுத்தார்.

‘ஜெயலலிதா மரணத்திற்கு அவங்க தான் காரணம்’ –  பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு!

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா அம்மா மீது பொய்யான வழக்குகள் போட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள். அதனால் தான் அவர் உயிரிழந்தார். இதற்கு முழு காரணம் திமுக தான் என குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து, அதிமுக சிகரம் போல உயர்ந்து கொண்டிருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்த பொள்ளாச்சி ஜெயராமன், தேர்தலுக்கு பின் திமுக என்ற ஒரு கட்சியே இருக்காது. திமுகவுக்கு இந்த தேர்தல் தான் கடைசி என்று கூறினார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமனை சம்பந்தப்படுத்தி அண்மையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இதனால் திமுக மீது பொள்ளாச்சி ஜெயராமன் கடும் கோபத்தில் இருக்கிறார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.