‘பாசிச பாஜகவிற்கு எதிரான நம் போருக்கு வலிமை சேர்க்கும் வெற்றி’ – ராகுலுக்கு ஸ்டாலின் வாழ்த்து
சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜகவைவிட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, பாஜக ஆட்சி செய்து வந்த ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தனது ஆட்சியை பாஜக இழந்துள்ளது.
பாஜகவின் இந்த வீழ்ச்சியை காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர். ஏனெனில், பாஜகவை எதிர்க்க வலிமையான தலைவர் இல்லை என கூச்சலிட்டு வந்த பாஜக ஆதரவாளர்களுக்கு, இந்த தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க முடியும்.
I congratulate Thiru @RahulGandhi and the @INCIndia party for the excellent performance in Chhattisgarh, Rajasthan & MP.
These results will reinforce our fight against the fascist BJP regime and help in strengthening the grand alliance.#Results2018
— M.K.Stalin (@mkstalin) December 11, 2018
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், “வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைவர் ராகுல் காந்திக்கும் வாழ்த்துகள். பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக நமது சிறப்புவாய்ந்த கூட்டணி நடத்திவரும் போருக்கு இந்த தேர்தல் முடிவுகள் வலிமை சேர்க்கும்” என பதிவிட்டுள்ளார்.