வெடிக்க தடை, குடிக்க தடை இல்லை: வசைபாடும் தமிழிசை
பட்டாசுகளுக்குத் தடை விதித்திருப்பது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை: பட்டாசுகளுக்குத் தடை விதித்திருப்பது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஒரு நாளுக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.தமிழகத்தில் காலை 6-7 மற்றும் இரவு 7-8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு போடப்பட்டது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
வெடி வெடிக்க தடை ………..குடிகுடிக்கத்தடை இல்லை……வெடிக்க கால நிர்ணயம் …………குடிப்பதற்கு காசு நிர்ணயம் ….. target in crores???எங்கே செல்கிறோம்.??.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 5, 2018
இந்நிலையில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பா.ஜ.க தமிழக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ‘வெடி வெடிக்க தடை, குடி குடிக்கத் தடை இல்லை. வெடிக்க கால நிர்ணயம், குடிப்பதற்குக் காசு நிர்ணயம். கோடிகளில் இலக்கு? எங்கே செல்கிறோம்?’ என்று பதிவிட்டுள்ளார்.