விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவது அரசுக்கு பெரிய காரியமில்லை: கமல்ஹாசன்
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசுக்கு பெரிய காரியமில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை: விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசுக்கு பெரிய காரியமில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை எழும்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கஜா புயல் பாதித்த பகுதிகளில் கூரையின்றி, உணவின்றி தவித்து வருகிறார்கள். பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று சொல்வதை குறை சொல்வதாக கூறக்கூடாது. விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்காமல் அவர்களை குறை சொல்லக்கூடாது.
விவசாயக்கடன் தள்ளுபடி, விலை பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் போன்ற கோரிக்கைகள் சரியான கோரிக்கைகள்தான். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது ஒன்றும் அரசுக்கு பெரிய காரியமில்லை என்றார்.