மு.க ஸ்டாலின் தலைவர் பதவியை விட்டுக்கொடுப்பாரா.. துரைமுருகன் பேச்சுக்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் !

 

மு.க ஸ்டாலின் தலைவர் பதவியை விட்டுக்கொடுப்பாரா.. துரைமுருகன் பேச்சுக்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் !

ஏற்கனவே தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓ.பி.ஸுக்கு எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை வீட்டுக் கொடுக்க தயாரா’ என்று துரைமுருகன் விமர்சித்தார்.

சேலம் மாவட்டத்துக்குட்பட்ட ஆத்தூரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ” முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நமது கட்சியைச் சிறப்பாக நடத்தினார். அவரது மறைவுக்குப் பின்னர், இந்த கட்சி எத்தனை நாள் நிலைக்கும் என்று எண்ணிய திமுக கட்சியினருக்குப் பாடம் புகட்டும் விதமாக, அதிமுக 3 ஆண்டுகளாக வெற்றியுடன் செயல்பட்டு வருகிறது. அதிமுகவில் நான் மட்டும் முதல்வர் அல்ல. அதிமுகவில் இருக்கும் அனைவருமே முதல்வர்கள் தான்” என்று தெரிவித்தார். 

ttn

இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், ‘அதிமுகவில் எல்லாரும் முதல்வர்கள் தான் என்று ஓ.பி.எஸ் கூறியுள்ளார். அப்படி அவர் கூறியது உண்மையென்றால், ஏற்கனவே தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓ.பி.ஸுக்கு எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை வீட்டுக் கொடுக்க தயாரா’ என்று விமர்சித்தார்.

ttn

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘மு.க ஸ்டாலின் அவரது தலைவர் பதவியை திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு விட்டுக் கொடுப்பாரா’ என்று கூறினார்.