மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகிறார்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 11 ஆம் தேதி சென்னை வருகிறார்.
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 11 ஆம் தேதி சென்னை வருகிறார்.
மக்களவை தேர்தலின் பரப்புரைக்காக அமித்ஷா தமிழகத்திற்கு வருவார் என்று பாஜகவினர் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் தமிழகம் வரவில்லை.இந்நிலையில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அமித் ஷா சென்னை வருகிறார்.
வரும் 11 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள இந்த விழாவில் கலந்து கொண்டு அவர் சிறப்புரையாற்றுவார் என்று தெரிகிறது. மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பதவியேற்றபின் தமிழகத்திற்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
முன்னதாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்குத் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அமித் ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.