மக்கள் நீதி மய்யம் இடைதேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அதிகம்……

 

மக்கள் நீதி மய்யம் இடைதேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அதிகம்……

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நடக்கவிருக்கும் இடைதேர்தலில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நடக்கவிருக்கும் இடைதேர்தலில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாங்குநேரி விக்ரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி இடைதேர்தல் நடைபெற உள்ளது. இன்று இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பை வெளியிட்டதற்கு பின்னர் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நிச்சயமாக போட்டியிடும் என்பது உறுதி. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இடைதேர்தலில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கமல்ஹாசன்

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும்  ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட சிறந்த வேட்பாளர்களை முன்னிருத்தி தைரியமாக களம் கண்டது. படு தோல்வி அடைந்தாலும் துவண்டு போகாமல் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெருவோம் என்ற உத்வேகத்துடன் இருந்தது.

அதே போன்று இப்போது நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இன்று அல்லது நாளை வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.