புல்வாமா தாக்குதலில் பலன் பெற்றவர்கள் யார்? – வைரல் ஆன ராகுல் காந்தி ட்வீட்

 

புல்வாமா தாக்குதலில் பலன் பெற்றவர்கள் யார்? – வைரல் ஆன ராகுல் காந்தி ட்வீட்

புல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதனால் பலனடைந்தவர்கள் யார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி ட்வீட் செய்தது வைரலாகி உள்ளது.

புல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதனால் பலனடைந்தவர்கள் யார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி ட்வீட் செய்தது வைரலாகி உள்ளது.

rahul

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இன்று புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததை நினைவுகூருவோம். அதே நேரத்தில் இந்த கேள்வியையும் எழுப்புவோம்:
1. இந்த தாக்குதலால் யார் மிகப் பெரிய பயனை அடைந்தார்கள்?
2. இந்த தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் முடிவுதான் என்ன?

3. பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக நடந்த இந்த தாக்குதலுக்கு ஏன் பா.ஜ.க அரசு பொறுப்பேற்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்தி பதிவிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாக 19 ஆயிரம் பேர் இதை லைக் செய்துள்ளனர். பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.