பாட்டி கதை சொல்வது போல தில்லி பத்திரிகையாளர்களுக்கு கதை சொல்லியிருக்கிறார் எடப்பாடி: ராமதாஸ் விமர்சனம்!

 

பாட்டி கதை சொல்வது போல தில்லி பத்திரிகையாளர்களுக்கு கதை சொல்லியிருக்கிறார் எடப்பாடி: ராமதாஸ் விமர்சனம்!

டெல்லி செய்தியாளர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பாட்டி கதை சொல்லி இருக்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை: டெல்லி செய்தியாளர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பாட்டி கதை சொல்லி இருக்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான நிவாரண நிதி கோருவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை சந்திக்க டெல்லி சென்றிருந்தார். அப்போது டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ‘நான் 9 முறை ஒரே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன்’ என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்குப் பல தரப்பினரிடம் இருந்து விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின.

இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஒரே தொகுதியில் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன்: எடப்பாடி – அப்படியா… எம்.பி.க்கும், எம்.எல்.ஏவுக்கும் சேர்த்து போட்டியிட்டதே 9 முறை தானே? அதில் 4 தோல்வியும் அடங்குமே? விடுங்க… பிள்ளைகளுக்கு பாட்டி கதை சொல்வது போல தில்லி பத்திரிகையாளர்களுக்கு கதை சொல்லியிருக்கிறார்!’ என்று பதிவிட்டுள்ளார்.