ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுப்பு! 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி

 

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுப்பு! 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை வரும் 26ஆம் தேதி வரை காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுப்பு! 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை வரும் 26ஆம் தேதி வரை காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

​ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து  ப.சிதம்பரம் நேற்று இரவு  கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, காலை 10 மணியளவில் சிபிஐ  அதிகாரிகள், வழக்கு குறித்து விசாரணையைத் தொடங்கினர். 

சிதம்பரத்தை  சிபிஐ அதிகாரிகள் ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் கைதாகியுள்ள  ப.சிதம்பரம் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை  என்று குற்றச்சாட்டிய சிபிஐ அதிகாரிகள், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை உத்தரவிடவேண்டும்’ என்று மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும்  குற்றப்பத்திரிகையில் சிதம்பரம் பெயரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிஐ தெரிவித்தது. 

இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை வரும் 26ஆம் தேதி வரை காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.