திமுகவில் புகுந்து அதிரடி அரசியல்… சேர்த்து விட்ட சீனியருக்கே ஆப்பு வைத்த செந்தில் பாலாஜி..!

 

திமுகவில் புகுந்து அதிரடி அரசியல்… சேர்த்து விட்ட சீனியருக்கே ஆப்பு வைத்த செந்தில் பாலாஜி..!

மு.க.ஸ்டாலின், உதயநிதியிடம் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டதால் செந்தில்பாலாஜி கே.என். நேருவை கண்டு கொள்வதே இல்லை.

செந்தில் பாலாஜியின் அரசியலை இப்போது உணர்ந்திருப்பார்கள் திமுக நிர்வாகிகள். கட்சிக்குள் வந்து சில மாதங்களிலேயே சீனியர்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டு முக்கியப்புள்ளி ஆகிவிட்டார் செந்தில் பாலாஜி. senthil balaji

ஆரம்பத்தில் திமுகவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அடுத்து அதிமுகவில் இணைந்து சீனியர்களுக்கே தண்ணீர் காட்டிவிட்டு போக்குவரத்து துறை அமைச்சரானார். ஜெயலலிதா ம்றைந்த பின்  அ.ம.மு.க.வுக்கு தாவினார். மீண்டும் ஆரம்பப்புள்ளியான திமுகவுக்கு மாறி அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., வாகவும் ஆகிவிட்டார். இவரை, தி.மு.க.,வுக்கு கொண்டு வந்தது, திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேரு தான்.senthil

ஆரம்பத்தில் நேருவிடம் பவ்யமாக நடந்து கொண்ட செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ., ஆனதும் மாறிவிட்டதாகக் கூறுகிறார்கள்.  மு.க.ஸ்டாலின், உதயநிதியிடம் தனது  செல்வாக்கை வளர்த்துக் கொண்டதால் செந்தில்பாலாஜி கே.என். நேருவை கண்டு கொள்வதே இல்லை. KN Nehru

சமீபத்தில் அவரது கரூர் மாவட்டத்துல நடந்த நிகழ்ச்சிகளுக்கு கூட, திண்டுக்கல்லை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, சக்கரபாணி போன்றோரை  சிறப்பு அழைப்பாளர்களாக  அழைத்திருந்தார். நேருவை அழைக்கவில்லை. இப்போதெல்லாம் நேருவிடம், செந்தில் பாலாஜி பற்றி யாராவது பேச்சை எடுத்தாலே, ‘அட விடுங்கப்பா… திறமை இருக்கிறவங்க, முன்னேறிட்டு போகட்டும்’ என  விரக்தியாக சொல்லி வருகிறார்.