திமுக – காங்கிரஸ் கொலைகார கூட்டணியா? ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி

 

திமுக – காங்கிரஸ் கொலைகார கூட்டணியா? ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி

திமுக – காங்கிரஸ் கூட்டணியை கொலைகார கூட்டணி என அழைக்கலாமா என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: திமுக – காங்கிரஸ் கூட்டணியை கொலைகார கூட்டணி என அழைக்கலாமா என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவுடன் பாஜக அமைக்க முயற்சிக்கும் கூட்டணி, கொள்கைக் கூட்டணியா அல்லது கொள்ளைக் கூட்டணியா என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவுடன், பாஜக அமைக்க முயற்சிக்கும் கூட்டணி, கொள்கைக் கூட்டணியா அல்லது கொள்ளைக் கூட்டணியா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அப்படி என்றால், முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ்-திமுகவே காரணம். ஆகவே, திமுக – காங்கிரஸ் கூட்டணியை கொலைகார கூட்டணி என அழைக்கலாமா?” என்று ஸ்டாலினுக்கு பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஒரு மாதத்தில் சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினர் தவிர மற்றவர்கள் அனைவரும் அதிமுகவிற்கு திரும்பி வந்து விடுவார்கள் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.