திடீரென்று ஆளுநரை சந்தித்த ஸ்டாலின்… சூடு பிடிக்கும் தமிழக அரசியல்!

 

திடீரென்று ஆளுநரை சந்தித்த ஸ்டாலின்… சூடு பிடிக்கும் தமிழக அரசியல்!

வரும் 20ம் தேதி இந்தி திணிப்பை எதிர்த்து திமுக சார்பில் போராட்டம் நடைபெற இருக்கிற நிலையில், ஸ்டாலின் திடீரென்று ஆளுநரை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் அழைப்பை ஏற்று இன்று ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்தார் தி.மு.க தலைவர். 

Governor

இன்று மாலை தி.மு.க தலைவர் ஸ்டாலினும்  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும்  சந்திக்க போவதாக தகவல்கள் வெளியாயின. இதனையடுத்து தி.மு.க தலைவர் ஆளுநரை சென்னையில் உள்ள ராஜ்பவனில் சந்தித்தார். தி.மு.க தலைவருடன் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் சென்றுள்ளனர். 

MK Stalin

இன்றைய அரசியல் சூழலை பற்றி விவாதிக்கலாம் என்றும் மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருக்கக் கூடும் என்றும் எதிர்பார்ககப் படுகிறது. கூட்டம் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், ஆளுநரும் தி.மு.க தலைவரும் எதைப் பற்றி ஆலோசிக்கின்றனர் என்ற  சரியான தகவல்கள் ஏதும் கிடைக்க வில்லை. வரும் 20ம் தேதி இந்தி திணிப்பை எதிர்த்து திமுக சார்பில் போராட்டம் நடைபெற இருக்கிற நிலையில், ஸ்டாலின் திடீரென்று ஆளுநரை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.