செம ஃபார்மில் திமுக… தேர்தலுக்கான புது முழக்கம் என்ன தெரியுமா?

 

செம ஃபார்மில் திமுக…  தேர்தலுக்கான புது முழக்கம் என்ன தெரியுமா?

இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக புதிய முழக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

சென்னை: இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக புதிய முழக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கின்றது. இதற்காக இப்போதே அனைத்து கட்சிகளும் களப்பணியில் இறங்க ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு திமுக, அதிமுக இரு கட்சிகளும் சந்திக்க இருக்கும் தேர்தல் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. குறிப்பாக கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவின் தலைவராக ஸ்டாலின் பதவியேற்றிருப்பதால், நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று தேசிய அரசியலில் தனது இருப்பை காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

stal

இதற்கிடையே தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் அந்த தேர்தலிலும் வெற்றி பெற்று தமிழகத்தில் தான் ஒரு அரசியல் ஆளுமை என நிரூபிக்க வேண்டிய அவசியத்தில் ஸ்டாலின் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

staalni

இந்நிலையில்,திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் தேர்தல் குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

மேலும், அக்கூட்டத்தில் திமுகவின் தேர்தல் முழக்கமாக “மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம்” என்ற முழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகம் முழுக்க திமுகவினர் பிரபலப்படுத்த தயாராகி வருகின்றனர்.