கமலின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டியது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி பேச்சு

 

கமலின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டியது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி பேச்சு

கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

நாகர்கோவில்: கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவர் கட்சி தொடங்குவதற்கு முன்னர் இருந்தே அவருக்கும், ஆளும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நிலவி வந்தது. கட்சி ஆரம்பித்த பிறகு அது மேலும் வலுப்பெற்றது. இந்நிலையில் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை.

கமல்ஹாசனின் கட்சி வளர்ந்தால் தமிழக மக்களுக்கு பெரும் ஆபத்து.கமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல் கமல்ஹாசன் நாடகம் நடத்துகிறார், அது தேர்தலுக்கு ஒத்துவராது என்றார்.