உள்ளாட்சித் தேர்தல்… தோற்ற டி.டி.வி.தினகரனும் நன்றி சொன்னார்!
உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இடங்களைக் கைப்பற்றாவிட்டாலும் மக்களுக்கு டி.டி.வி.தினகரன் நன்றி கூறியுள்ளார். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதற்குக் குறைவான இடத்தில் அ.தி.மு.க கூட்டணியும் வெற்றி பெற்றது. தேர்தல் முறைகேடுகள், வெற்றி பெற்றவர்கள் பெயர் மாற்றி அறிவிக்கப்பட்டது என்று பல்வேறு குற்றச்சாட்டு இருந்தாலும் பெரும்பாலும் அமைதியாகவே இந்த தேர்தல் நடந்து முடிந்தது.
உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இடங்களைக் கைப்பற்றாவிட்டாலும் மக்களுக்கு டி.டி.வி.தினகரன் நன்றி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதற்குக் குறைவான இடத்தில் அ.தி.மு.க கூட்டணியும் வெற்றி பெற்றது. தேர்தல் முறைகேடுகள், வெற்றி பெற்றவர்கள் பெயர் மாற்றி அறிவிக்கப்பட்டது என்று பல்வேறு குற்றச்சாட்டு இருந்தாலும் பெரும்பாலும் அமைதியாகவே இந்த தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எந்த ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியையும் கைப்பற்றவில்லை. ஆனால், 95 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து டி.டி.வி.தினகரன் கூறுகையில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயப்பூர்வ நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றியினைக் காணிக்கையாக்குகிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 3, 2020
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தளராது போட்டியிட்ட கழக வேட்பாளர்களுக்கும், அவர்களது வெற்றிக்காக இரவு பகல் பாராது உழைத்த கழக நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும் மனப்பூர்வமான நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தளராது போட்டியிட்ட கழக வேட்பாளர்களுக்கும், அவர்களது வெற்றிக்காக இரவு-பகல் பாராது உழைத்த கழக நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும் மனப்பூர்வமான நன்றியினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 3, 2020