இன்று பிறந்தநாள் கொண்டாடும் திருமாவளவன்: கட்சியினருக்கு விடுத்த 2 வேண்டுகோள் இதுதான்!
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகப் பரப்புரை நிகழ்த்துமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு அதன் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகப் பரப்புரை நிகழ்த்துமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு அதன் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு தமிழர் எழுச்சி நாள் என்ற பெயரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரியார் திடலில் அவரது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், என் பிறந்த நாளான தமிழர் எழுச்சி நாளை முன்னிட்டு 2 முக்கியமான செயல்திட்டங்களை முன்வைக்கிறேன். முதலாவது, ‘தேசிய கல்விக் கொள்கை’ என்ற பெயரில் மத்திய அரசு உருவாகியுள்ள ‘சனாதனக் கல்விக் கொள்கையை’ எதிர்த்து பரப்புரை மேற்கொள்ள வேண்டும். இன்றிலிருந்து பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 வரை தமிழகம் முழுவதும் இந்த பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்.
இரண்டாவது மீண்டும் பனைவிதைகளை விதைக்க வேண்டும். நாடு முழுவதும் விதைக்க வேண்டும். இதற்கு காலக்கெடு இல்லை. நான் கூறிய இந்த இரண்டு திட்டங்களையும் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும்’ என்றார்.