அதிமுகவின் பாதுகாப்பிற்காகத்தான் கேவியட் மனு: அமைச்சர் மாஃபா தகவல்

 

அதிமுகவின் பாதுகாப்பிற்காகத்தான் கேவியட் மனு: அமைச்சர் மாஃபா தகவல்

அதிமுகவின் பாதுகாப்பிற்காகத் தான் காவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை: அதிமுகவின் பாதுகாப்பிற்காகத் தான் காவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அது தொடர்பாக நிலுவையில் இருந்த தீர்ப்பு நேற்று வெளியாகியது.

தகுதிநீக்கம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பை தினகரன் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தினகரனுடன் ஆலோசனை நடத்தி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தினகரன் தரப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “அதிமுகவின் பாதுகாப்பிற்காகத்தான் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம். டிடிவி தினகரன் தரப்பினர் எந்த மாதிரி மேல்முறையீடு செய்யவுள்ளனர் என்பது தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும், இடைத்தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் வந்தாலும், அல்லது அதற்கு முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிபெறும்” என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.