வாய்ப்பு கிடைத்தபோது, அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை... எதிர்க்கட்சிகளை சாடிய யோகி ஆதித்யநாத்

 
உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு தடை; அதிர்ச்சி கிளப்பும் யோகி

உத்தர பிரதேசத்தில் வாய்ப்பு கிடைத்தபோது (ஆட்சியில் இருந்தபோது) அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை அதனால்தான் அவர்கள் இப்போது ஆட்சியில் இல்லாதபோது தவறான தகவல்களை ஆதரித்து மக்களின் உயிருடன் விளையாடுகிறார்கள் என்று எதிர்க்கட்சிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.

உத்தர பிரதேசம் கௌசாம்பியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில் கூறியதாவது: பாரதிய ஜனதாவின் இரட்டை எந்திர அரசுகள் முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் போது, ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும், அவர்களின் சுவரில் இருந்து இன்றும் கோடிக்கணக்கான கரன்சி நோட்டுகள் (கான்பூர் தொழிலதிபர் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் மத்திய ஏஜென்சிகள் நடத்திய சோதனையில் மொத்தம் ரூ.177.45 கோடி ரொக்கம் மீட்கப்பட்டது) இருந்து வெளியேறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

பா.ஜ.க.

மத்திய, மாநில அரசுகள் மாநில மக்களுக்கு அளிக்கும் இலவச உணவு, முந்தைய அரசுகளில் ஊழலுக்கு பணம் பயன்படுத்தப்பட்டது. தடுப்பூசிகளுக்கு எதிரானவர்கள் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை செய்து, கொரோனாவுடன் நட்பு கொள்கிறார்கள், அவர்கள் ஏழைகளை பற்றி கவலைப்படவில்லை. அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தபோது, அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால்தான் அவர்கள் இப்போது ஆட்சியில் இல்லாதபோது,  தவறான தகவல்களை ஆதரித்து மக்களின் உயிருடன் விளையாடுகிறார்கள்.

கும்பமேளா (கோப்புப்படம்)

கௌசாம்பில் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்பு காவேரி யாத்திரைக்கு கட்டுப்பாடுகள் இருந்தன. இன்று யாத்திரைக்கு அரசு மலர் இதழ்களை காட்டுகிறது. முன்பு பிரயாக்ராஜில் கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இப்போது பிரயாக்ராஜில் கும்பமேளாவுக்கு ஏற்பாடு செய்யும்போது, உலகின் அனைத்து பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் கும்பமேளா ஏற்பாடுகளை பாராட்டுகின்றனர். இவ்வாறு அவர் தெரவித்தார்.