ஸ்டாலின் ஒரு கொரோனா; உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா- வைகை செல்வன்

 

ஸ்டாலின் ஒரு கொரோனா; உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா- வைகை செல்வன்

தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுகூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன், “செம்மொழியான தமிழ் மொழிக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்க 10 கோடி கொடுக்கப்படும் என ஜெயலலிதா கூறினார். அதனை எடப்பாடி பழனிச்சாமி வழங்கி இருக்கையை அமைத்தார். ஸ்டாலின் ஒரு கொரோனா என்றால் உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா.

ஸ்டாலின் ஒரு கொரோனா; உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா- வைகை செல்வன்

வெற்றி பெற்றவுடன் உலக அரசியலில் வாக்காளர்களுக்கு 5000 ரூபாய் கடன் வைத்தவர் டிடிவி தினகரன். கட்டடத்திற்கு வாடகை கொடுக்காமல், தன்னிடன் இருந்தவர்களை கட்சி தொடங்க முடியவில்லை, எங்கேயாவது சென்று சேர்ந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார் ரஜினி. கவுதமிக்கு கடன் வைத்தவர் கமல் அவர் பேச்சை கேட்க வரவில்லை, நடிகர் என பார்க்க வருகின்றனர். ஸ்டாலின் எம்ஜிஆர் ரசிகர் என்றால் ஸ்டாலின் அதிமுகவில் இருந்து இருக்க வேண்டும். இரட்டை இலைக்கு அல்லவா வாக்களித்திருக்க வேண்டும், அதிமுகவை அழிக்க நினைக்கிறார். ஸ்டாலினுக்கு மூலையும் இல்லை, முடியும் இல்லை, மூலப்பத்திரமும் இல்லை. அதிமுக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. காவிரி நடுவர் மன்றம் அமைத்தது. 18 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் போது திமுக- காங்கிரஸ் நிர்பந்தம் படுத்தி ஏன் கொண்டுவரவில்லை” எனக் கூறினார்.