பாகிஸ்தானை மிகவும் பிடிக்கும் என்றால் அங்க போய் குடியேறுங்க பரூக் அப்துல்லா ... மத்திய அமைச்சர்

 
கண்டுபிடிக்கப்பட்டார் ஃபரூக் அப்துல்லா!

பாகிஸ்தானை மிகவும் பிடிக்கும் என்றால் பரூக் அப்துல்லா அங்கேயே குடியேற வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த சில தினங்களுக்கு தீவிரவாதிகளின் தாக்குதலில் 3 காவலர்கள் பலியாகினர். இதனை தொடர்ந்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறுகையில், மத்திய அரசு பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி  காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த அரசு வழிவகை செய்ய வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தங்கள் அகங்காரத்தை விட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான்

மேலும் பிரதமர் மோடியையும் பரூக் அப்துல்லா மறைமுகமாக தாக்கினார். இந்து, முஸ்லிம், சீக்கியர் அல்லது யாராக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாக இணைக்கக்கூடிய ஒரு தைரியமான பிரதமர் இந்தியாவுக்கு தேவை என்றும் பரூக் அப்துல்லா தெரிவித்தார். பாகிஸ்தான் பேச வேண்டும் என்று பரூக் அப்துல்லா கூறியதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

பிரகலாத் ஜோஷி

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், பாகிஸ்தானுடன் இந்தியா பேச வேண்டும் என்று பரூக் அப்துல்லா பலமுறை கூறியிருக்கிறார். அவருக்கு (பரூக் அப்துல்லா)  பாகிஸ்தானை மிகவும் பிடிக்கும் என்றால், அவர் அங்கேயே குடியேற வேண்டும் என்று தெரிவித்தார்.