உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக வேண்டும் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...

 
உதயநிதி, அன்பில் மகேஷ்..

திமுக இளைஞரணி தலைவர் தலைவரும்,  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

வெற்றிடம் என்று சில நடிகர்கள் வந்தார்கள்… ரஜினி, கமலுக்கெதிராக உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
உதயநிதியின் பிறந்தநளையொட்டி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரம் பேருக்கு அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர்.  அப்போது பேசிய  அன்பில் மகேஷ், “ இதற்கு முன்னாள் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மக்களை கண்டுகொள்ளவில்லை என்று கூறினார்.

அன்பில்

மேலும், உதயநிதி ஸ்டாலினை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மக்கள் மட்டும் சொந்தம் கொண்டாடாமல் 234 தொகுதிகளிலும் சொந்தம் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் அவருக்கு பொறுப்பு தர வேண்டும் என்றார்.  உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் என்றும்  இது எனது விருப்பம் மட்டுமல்ல சேப்பாக்கம் தொகுதி மக்கள் உள்ளிட்ட பலரது விருப்பம் இதுவே என்றார். 

மக்களுக்காக உழைக்கும் உதயநிதியின் திறமை ஒரு தொகுதியில் உடன் சென்று விடக்கூடாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அன்பில் மகேஷின் இந்த கருத்து அரசியல் களத்தில் விவாத பொருளாகியிருக்கிறது. பலரும் இது குடும்ப அரசியலுக்கு வழி வகுக்கும் என விமர்சித்து வருகின்றனர்.