பிரதமர் வேளாண் திட்டத்தில் மோசடி… தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை
பிரதமரின் வேளாண் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்றவர்கள் பட்டியலை மாவட்ட வாரியாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரின் வேளாண் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரு.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. தலா ரூ.2000ம் என மூன்று தவணையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் முறைகேடு நடந்துள்ளது என்று செய்தி வெளியானது. சேலம் மாவட்டத்தில் மட்டும் 10,700 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் என்ற போர்வையில் மோசடி செய்ததாக 51 பேர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி என தொடர்ந்து பல மாவட்டங்களில் இந்த முறைகேடு நடந்ததாக தகவல் வெளியாகி வருகிறது.
பிரதமரின் வேளாண்மை நிதி வழங்கும் திட்டத்தின்கீழ்(Pradhan Mantri Kisan Samman Nidhi)விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதில் தமிழகத்தில் நடந்திருக்கும் மிகப்பெரிய மோசடி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.(1/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 7, 2020
இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “பிரதமரின் வேளாண்மை நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் (Pradhan Mantri Kisan Samman Nidhi) விவசாயிகளுக்கு
இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக உயர்நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு இது தொடர்பான வழக்குகளைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.(4/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 7, 2020
உதவித்தொகை வழங்கப்படுவதில் தமிழகத்தில் நடந்திருக்கும் மிகப்பெரிய மோசடி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு மாவட்டமாக வெளியாகிவரும் தகவல்களைப் பார்க்கும்போது வலைப்பின்னல் போல இம்மோசடி அரங்கேறி இருப்பது தெளிவாகிறது.
ஏழை,எளிய விவசாயிகளுக்கு சென்று சேரவேண்டிய உதவித்தொகையைப் பொய்கணக்குகள் மூலம் கையாடல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்
மாவட்ட வாரியாக இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற்றவர்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக உயர்நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு இது தொடர்பான வழக்குகளைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.