இந்த நெம்பர்-1 அணிதான் ஜெயலலிதா, சசிகலாவை கம்பி எண்ண வைத்தது - அமைச்சர் உதயநிதி பேச்சு

 
u

ஜெயலலிதா, சசிகலாவை கம்பி எண்ண வைத்தது இந்த அணிதான்.  இந்த அணிதான் திமுகவில் எப்போதும் நம்பர் ஒன் அணி என்று பெருமிதத்துடன் கூறினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

 சென்னையில் கோட்டூர்புரத்தில் அமைந்திருக்கும் அண்ணா நூற்றாண்டு கழகத்தில் திமுக சட்டப்பிரிவு அணி சார்பில், ‘ஒன்றியமும் மாநிலமும்’ என்கிற தலைப்பில் நடந்த போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதில் பங்கேற்று பேசினார்.  அப்போது திமுகவில் எப்போதும் நம்பர் ஒன் அணி என்றால் அது சட்டத்துறை தான்.  திமுகவின் இக்கட்டான சூழ்நிலைகளில் இந்த அணி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. 

y

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஏ1 ஆகவும் அவரது நெருங்கிய தோழி சசிகலாவை ஏ2வாகவும் கம்பி எண்ண வைத்ததும் இந்த சட்டத்துறை தான் என்று சொன்னவர்,  அண்ணாவுக்கு அருகில் உறங்க வேண்டும் என்ற கலைஞரின்  கடைசி ஆசையை கடுமையாக பாடுபட்டு நிறைவேற்றி காட்டியதும் இந்த சட்டத்துறை தான் என்றார்.

 தொடர்ந்து பேசிய உதயநிதி,   ஜெயலலிதா இருந்த வரையிலும் அதிமுகவின் நிலைமை வேறு தற்போது அதில் வேறு மாதிரி இருக்கிறது என்றவர்,  இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்று சொன்னார்.  தமிழ்நாடு என இருக்க வேண்டாம் தமிழகம் என மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்னார். 

 அப்போது திமுக ஆட்சியில் இல்லாமல் இபிஎஸ் ஆட்சியும் ஓபிஎஸ் ஆட்சியும் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் பெயரை மாற்றி இருப்பார்கள்.  ஆளுநர் சொன்னதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின் என்றார்.

 பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து விட்டு அவரை சந்தித்தது எதிர்க்கட்சியினரால் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பது குறித்து,  நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விளக்கு அளிக்கவும் விளையாட்டு துறை சார்பாக 5 முக்கியமான கோரிக்கைகளை வைக்கவும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தேன்.  ஆனால் அதிமுகவினரோ தங்கள் கட்சி பிரச்சனைகளை தீர்க்கத மட்டுமே பிரதமரை சந்திக்கிறார்கள் என்றார் அமைச்சர் உதயநிதி.