இது அற்பத்தனமானது; தமிழக அரசு வெட்கித் தலைகுனியணும் - பிரேமலதா விஜயகாந்த்

 
p

முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மீது செல்போன் திருட்டு வழக்கு பதிவு செய்ததற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.   இது அற்பத்தனமானது; தமிழக அரசு வெட்கி தலை குனியணும் என்று ஆவேசப்பட்டு இருக்கிறார்.

j

 இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது ,   தமிழ்நாடு  போதை தமிழ்நாடு மாறிவிட்டது. பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைவரும் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.   அப்படி இருக்கும்போது எப்படி சட்டம் ஒழுங்கு உள்ள மாநிலமாக தமிழ்நாட்டை பார்க்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினர்.

 தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்,   முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மீது எத்தனையோ வழக்குகள் இருந்தும் , அவர் மீது செல்போன் திருட்டு வழக்கு போட்டிருப்பது அற்பத்தனமானது.  இதற்காக தமிழக அரசு வெட்கி தலைகுனியணும்.  ஒரு வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருக்க வேண்டும்.

 எந்த அளவுக்கு கீழ்த்தரமான கேவலமான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு என்று ஆவேசப்பட்டு உள்ளார்.  எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அரசு செல்ஃபோன் திருட்டு வழக்கு பதிவு செய்ததற்கு  கடும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர் . இந்த நிலையில் தேமுதிக பொருளாளரும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.