சீமானின் உருவ பொம்மையை எரித்த தமிழ்ப்புலிகள்

 
s

விஜயநகர பேரரசு ஆட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள இங்கு வந்தவர்கள் தான் அருந்ததியர்கள் என்று ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருந்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.  இதற்கு தமிழ்ப் புலிகள் எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் சீமானின் உருவ பொம்மையை எடுத்து எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். 

see

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார்.  அவரை ஆதரித்து சீமான் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார் . பிரச்சாரத்தின் போது சாதிய அடிப்படையில் சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  குறிப்பாக அருந்ததியர் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 பிரச்சாரத்தில் பேசிய சீமான்,  முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா?  மானத் தமிழ் மக்கள்தான் முதலியார். சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் பட்டாடை நெய்து கொடுத்தவர்கள் முதலியார் ஜாதியினர்.  போர் என்றால் முதலில் செவ்வேள் ஏந்தி களத்துக்கு வந்தவர்கள் . அதனால்தான் அவர்கள் முதலியார் என்று அழைக்கப்பட்டார்கள் என்றார்.   அவர் மேலும்,   இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.  அதைப் போல் விஜயநகர பேரரசு ஆட்சியிலும் தூய்மை பணியை செய்ய வேண்டும் என்று சொன்னபோது , போடா வேற ஆளப் பாரு என்று சொல்லிவிட்டார்கள்.   இதனால் வேறு வழி இல்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள்.   அவர்கள் தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் என்று சீமான் பேசினார்.

sss

 சீமானின் இந்த பேச்சுக்கு அருந்ததியர் இடையே கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.  இதனால் ஆத்திரமடைந்த அருந்ததியர்கள் நாங்கள் தெலுங்கு வந்தேரிகளா என்று கடும் கோபத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா,  அருந்ததியர் பகுதிக்குள் வாக்கு சேகரிக்க சென்ற போது,  அப்பகுதி மக்கள் எங்களை தெலுங்கு வந்தேறிகள் என்று சீமான் சொல்லுகிறார்.   நீங்க எப்படி இங்கே ஓட்டு கேட்டு வரலாம் என்று ஆத்திரப்பட்டு வாக்கு சேகரிக்க விடாமல் அவர்களை திரும்பிப் போக வைத்துள்ளார்கள்.

  இந்த நிலையில் சீமானின் பேச்சை கண்டித்து தமிழ் புலிகள் அமைப்பினர் மதுரை மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் அருகே சீமானின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சீமானின் உருவ பொம்மையை எரித்து கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.  சாலையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட முயன்ற போது போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர் . 

சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது போலீசார் அதை தடுத்தனர்.  இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது . பின்னர் சீமானின் உருவ பொம்மையை எரித்த தமிழ் புலிகள் அமைப்பினர் தல்லாகுளம் போலீசார் கைது செய்துள்ளனர்.