ஆட்சியை தீர்மானிக்க போவது பாஜக தான் : எல். முருகன் சூளுரை!

 

ஆட்சியை தீர்மானிக்க போவது பாஜக தான் : எல். முருகன் சூளுரை!

வரும் தேர்தலில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்க போகிறது என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறி வருகிறார். அதே சமயம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று கூறுவது சர்ச்சையை கிளப்பி வருகிறது.

ஆட்சியை தீர்மானிக்க போவது பாஜக தான் : எல். முருகன் சூளுரை!

இந்நிலையில் சென்னை திருவொற்றியூரில் வேல் யாத்திரை நடத்த ஆயத்தமான எல்,முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அடுத்து அமைய உள்ள ஆட்சியை தீர்மானிக்கப் போவது பாஜகதான். வரும் தேர்தலில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்க போகிறது. எத்தனை தடைகள் வந்தாலும் அனைத்து ஊர்களிலும் உள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று வேல் யாத்திரை வெற்றி அடையும்” என்றார்.

ஆட்சியை தீர்மானிக்க போவது பாஜக தான் : எல். முருகன் சூளுரை!

பாஜக துணையின்றி அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்று அதிமுக அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் பாஜக ஆதரவின்றி எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாது என எல். முருகன் கூறி வருவது கவனிக்கத்தக்கது.