மத்திய அமைச்சராக இருந்தபோது மக்களவையில் நேதாஜி குறித்து ஏன் பேசவில்லை?.. மம்தாவை கேள்வி கேட்கும் பா.ஜ.க.

 
மம்தா பானர்ஜி

முன்பு மத்திய அமைச்சராக இருந்த போது மக்களவையில் நேதாஜி குறித்து மத்திய அமைச்சர்கள் மத்தியில் ஏன் எழுப்பவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பா.ஜ.க.வின் சௌமித்ரா கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்க பா.ஜ.க.வின் துணை தலைவர் சௌமித்ரா கான் கூறியதாவது: வித்தைக்காரி மம்தா பானர்ஜி எல்லாவற்றிலும் நாடகம் ஆடுகிறார். சிங்கூர் இளைஞரிடமும் அவ்வாறே செய்தார். நேற்று (நேற்று முன்தினம்) சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளின் போது சங்கு ஊதுவதன் மூலம் வங்காளத்தை முழுவதுமாக வித்தை செய்தார். ஜனவரி 26ம் தேதி குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்தி சேர்க்கப்படாது. 

சௌமித்ரா கான்

கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை (அலங்கார ஊர்தி சேர்க்கப்படாதது தொடர்பாக) ஒரு திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்தவர்தான் தாக்கல் செய்து இருக்க வேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்பட்ட பிறகு, மோடியின் பெரிய வேலை என்ன என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். சலோ டெல்லி முழக்கத்தை எழுப்பிய நேதாஜிக்கு அந்த டெல்லியில் முக்கிய இடம் கிடைத்துள்ளது. 

நேதாஜி

முன்பு மத்திய அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, நேதாஜி விவகாரத்தை மக்களவையில் ஏன் மற்ற மத்திய அமைச்சர்கள் மத்தியில் எழுப்பவில்லை. ஆசாத் ஹிந்த் பவுஜ் வீரர்களுக்கு மம்தா பானர்ஜி எதுவும் செய்யாமல் தோல்வியுற்றார். அவர்கள் வாழ்வதற்கு ஒரு துண்டு நிலத்தை அவர் கொடுத்திருக்கலாம். கடந்த பத்து வருடங்களில் அவர் (மம்தா பானர்ஜி) அதை செய்யவில்லை. எனவே மம்தா பானர்ஜி என்றால் வித்தை பற்றியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.