திமுகவில் பலமிழந்த செந்தில்பாலாஜி?
திமுகவில் செந்தில் பாலாஜி வசம் இருந்த கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
திமுக மறு சீரமைப்பு செய்யப்பட்டு 75 மாவட்ட செயலாளர்கள் இருந்த நிலையில் தற்போது 110 மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார். அதன் அடிப்படையில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் எனவும் பிரிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முக்கியமான நபர்களுக்கு மட்டும் மூன்று சட்டமன்ற தொகுதிகள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவில் செந்தில் பாலாஜி வசம் இருந்த கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகளால் கரூர் மேற்கு மற்றும் கரூர் கிழக்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது
1.திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலி, அம்பாசமுத்திரம்,
பாளையங்கோட்டை
2.சேலம்
சேலம் வடக்கு, சேலம் தெற்கு,சேலம் மேற்கு
3.கடலூர்
புவனகிரி, காட்டுமன்னார் கோயில், சிதம்பரம்
4.விழுப்புரம்
திண்டிவனம் தனி, வானூர் தனி, விழுப்புரம்,
5. சென்னை
துறைமுகம், திருவிக நகர், வில்லிவாக்கம்
மயிலாப்பூர் சைதாப்பேட்டை வேளச்சேரி

