எடப்பாடி அதிர்ச்சி… சசிகலா மீண்டும் ஆக்டிவ் மோடு!

 
சசிகலா

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல அணிகளாக சிதறிய நிலையில் உள்ளது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பிரிந்தது கட்சியின் பலத்தை குறைத்தது. கடந்த சில தேர்தல்களிலும் கட்சி பெரிய வெற்றியை பெறவில்லை. குறிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதால் அதிமுகவின் நிலைமை மேலும் மோசமடைந்தது.

இந்த நிலையில் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட சிலர் கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.  இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சசிகலா மீண்டும் அதிமுகவில் ஆதரவை திரட்ட முயற்சி செய்கிறார். தனக்கு பதவி தேவையில்லை, ஜெயலலிதா உருவாக்கிய கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே நோக்கம் என அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சசிகலாவுடன் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் அடுத்த கட்ட அரசியல் என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.