காங்கிரஸ் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் 15 நிமிடங்களுக்குள் சீனாவை வெளியேற்றி இருக்கும்… ராகுல் காந்தி

 

காங்கிரஸ் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் 15 நிமிடங்களுக்குள் சீனாவை வெளியேற்றி இருக்கும்… ராகுல் காந்தி

காங்கிரஸ் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் இந்திய பகுதியிலிருந்து சீனா ராணுவத்தை 15 நிமிடங்களுக்குள் வெளியேற்றி இருக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது விவசாயியை காக்க பயணம் என்ன பேரணியின் ஒரு பகுதியாக நேற்று மாலை அனாஜ் மண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோழை. நமது நிலத்தை யாரும் எடுத்துக்கொள்ளவில்லை என்று கோழை பிரதமர் சொல்கிறார். இன்று உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே உள்ளது, அதன் நிலம் மற்றொரு நாட்டால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் 15 நிமிடங்களுக்குள் சீனாவை வெளியேற்றி இருக்கும்… ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மற்றொரு நாடு உள்ளே வந்து 1,200 சதுர கி.மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள ஒரே நாடு இந்தியா. பிரதமர் தன்னை தானே தேசபக்தர் என்று சொல்லி கொள்கிறார் ஆனால் சீன படைகள் நமது பிராந்தியத்துக்குள் உள்ளதை முழு நாடும் அறியும். அவருடைய நாட்டு பற்றி எந்தவிதமானது. அவர் என்ன வகையான தேசபக்தர்? நாங்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்திருந்தால் 15 நிமிடங்களுக்குள் சீனாவை வெளியேற்றி இருப்போம்.

காங்கிரஸ் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் 15 நிமிடங்களுக்குள் சீனாவை வெளியேற்றி இருக்கும்… ராகுல் காந்தி
பிரதமர் மோடி

நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன், மத்தியில் எங்களது அரசாங்கம் இருந்தபோது நம் நாட்டுக்குள் ஒரு அடி கூட எடுத்துக்வைக்க சீனாவிற்கு போதுமான சக்தி இல்லை. உலகில் தனது நிலம் மற்றொரு நாட்டால் கைப்பற்றப்பட்ட ஒரே ஒரு நாடு மட்டுமே உள்ளது. அது இந்தியாதான். அவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று அழைக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.