நீர், வனம், நிலத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் நமது ஆதிவாதிகளுடன் காங்கிரஸ் வலுவாக நிற்கிறது.. ராகுல்

 
ராகுல் காந்தி

நீர், வனம் மற்றும் நிலத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் நமது ஆதிவாதி சகோதர, சகோதரிகளுடன் காங்கிரஸ் வலுவாக நிற்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு வன பாதுகாப்புக்காக புதிய வன பாதுகாப்பு விதிகள் 2022ஐ கொண்டு வந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கோடீஸ்வர தொழிலதிபர்கள் வன நிலத்தை எளிதாக அபகரிப்பதற்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பா.ஜ.க.

இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், மோடி-நண்பன் அரசாங்கம் அதன் நண்பனுக்கான சிறந்தது. வன நிலத்தை எளிதில் அபகரிப்பதற்காக பா.ஜ.க. அரசு புதிய வன பாதுகாப்பு விதிகள் 2022ஐ கொண்டு வந்துள்ளது. இது முந்தைய (காங்கிரஸ் தலைமையிலான) ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் வன உரிமைகள் சட்டம் 2006ஐ நீர்த்து போகச் செய்கிறது. நீர், வனம் மற்றும் நிலத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் நமது ஆதிவாதி சகோதர, சகோதரிகளுடன் காங்கிரஸ் வலுவாக நிற்கிறது என பதிவு செய்துள்ளார். 

ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய விதிகள், வன அனுமதிக்கான இறுதி மத்திய அரசால் வழங்கப்பட்ட பிறகு, வன உரிமைகளை தீர்த்துக் கொள்ள அனுமதிக்கும். வன அனுமதி வழங்கப்பட்டவுடன் மற்ற அனைத்தும் வெறும் சம்பிரதாயமாக மாறும். கிட்டத்தட்ட எந்த உரிமைகோரல்களும் அங்கீகரிக்கப்பட்டு தீர்க்கப்படாது. மேலும் வன நிலத்தை திசைதிருப்பும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு மாநில அரசுகள் மத்திய அரசிடமிருந்து இன்னும் அழுத்தத்திற்கு உள்ளாகும் என குற்றம் சாட்டினார்.