அதிமுக – திமுக இடையே வெடித்த மோதல்!

 

அதிமுக – திமுக இடையே வெடித்த மோதல்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.செல்வராஜை எதிர்த்து திமுக சார்பில் டி.ஆர்.சண்முகசுந்தரம் களம் காணுகிறார். அதிமுக – திமுக இடையே நேரடி போட்டி நிலவுவதால் இரு கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று காலை மேட்டுபாளையத்தில் இருக்கும் தேவாலயம் வாயிலில் வழிபாடு முடித்துவிட்டு வெளியே வரும் கிறித்துவர்களிடம் இரு கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக – திமுக இடையே வெடித்த மோதல்!

அச்சமயம், ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு என்ற திமுகவின் பிரச்சாரப் பாடல் சத்தமாக ஒலித்த படி 3 பிரச்சார வாகனங்கள் வந்து நின்றுள்ளது. கோவில், தேவாலயம், மசூதி உள்ளிட்ட வழிபாடு தலங்களுக்கு முன் பிரச்சார வாகனங்களை பயன்படுத்த அனுமதி கிடையாது. அதனால், அங்கிருந்த போலீசார் வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிமுக – திமுக இடையே வெடித்த மோதல்!

திமுக பிரச்சார வாகனங்களில் இருக்கும் பேனர்களை அதிமுகவினர் கிழித்ததால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், பிரச்சார வாகனங்களை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற நிலையில் அதிமுகவினர் தங்களை தாக்கி விட்டதாகக் கூறி திமுகவினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டனர். அதிமுக – திமுக இடையே வெடித்த இந்த மோதல் மேட்டுபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.