அடுத்த 20-30 ஆண்டுகளுக்கு பாஜகதான்; வேறு வழியே இல்லை- பிரசாந்த் கிஷோர்

 
prashant kishore

அடுத்த 20-30 ஆண்டுகளில், இந்திய அரசியல் பாஜகவைச் சுற்றியே சுழலும் என அரசியல் விமர்சகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். 

Prashant Kishor predicts 'electoral rout' for Congress in Gujarat, Himachal  | Latest News India - Hindustan Times

பிரசாந்த் கிஷோர், தி இந்தியன் எக்ஸ்பிரஸின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் கோயங்கா மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் வந்திதா மிஸ்ரா ஆகியோருடன் எக்ஸ்பிரஸ் ஈஅடாவில் உரையாடினார். அப்போது பேசிய பிரசாந்த் கிஷோர், “நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் 20- 30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் சுழலும். எந்தவொரு கருத்தியலோ அல்லது விஷயமோ அதன் உச்சத்தை அடைந்த பின்னர் கட்டாயம் அது சரிவை சந்திக்கும் என்பது விதி. பாஜகவுக்கும் இந்நிலை ஏற்படும் ஆனால் அடுத்த 5 அல்லது 10 வருடங்களுக்குள் அது நடைபெறாது.
 
வருகிற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெறும் என நான் கூறவில்லை; ஒன்று பாஜகவை ஆதரிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும். மாறாக புறக்கணிக்க முடியாது. சுதந்திர இந்தியாவில் முதல் 40 ஆண்டுகள் காங்கிரஸ் இந்த நிலையில்தான் இருந்தது” எனக் கூறினார்.