“ராமதாஸை பாமகவில் இருந்து நீக்க அன்புமணி திட்டமா?"- திலகபாமா பரபரப்பு பேட்டி

 
ச் ச்

கூட்டணி குறித்து குறித்து மருத்துவர் ராமதாஸ் பேச முடியாது, கூட்டணி குறித்து தலைவர் அன்புமணி ராமதாஸ்தான் முடிவெடுப்பார் என பாமக பொருளாளர் திலகபாமா பேட்டியளித்துள்ளார்.

திலகபாமா

சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய திலகபாமா, “பாமக தலைவராக ஆகஸ்ட் 2026 ஆம் ஆண்டு வரை அன்புமணி நீடிப்பதாக  இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கியுள்ளது. பாமகவில் இதுவரை நீடித்த குழப்பங்களுக்கு தீர்வாக அமைந்துள்ளது. இது மிகப்பெரிய உற்சாகத்தை தந்துள்ளது. மருத்துவர் அன்புமணி ராமதாஸின் கீழ் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. பாமக இனி எந்த பக்கம் என்ற குழப்பத்தை விட்டுவிட்டு பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றுதான், அதன் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்தான் என்பதை முன்னெடுத்து பணியாற்ற வேண்டும். பாமக ஜனநாயகரீதியில் அன்புமணி தலைமையில் சட்ட ரீதியாக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ சரியாக செய்து கடந்து வந்து கொண்டிருக்கிறது.

பாமகவை பிளவுபடுத்த வேண்டும், அன்புமணி தலைவராக இருக்கக் கூடாது, பாமகவை ஒன்றுமில்லாமல் செய்து திமுகவுடன் இணைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுபவர்களிடமிருந்து கட்சியை மீட்கும் நடவடிக்கையாக அன்புமணி ராமதாஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். கட்சியை பிளவுபடுத்துபவர்கள் மீது அன்புமணி ராமதாஸ் உரிய நடவடிக்கை எடுப்பார். சட்ட ரீதியாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக அன்புமணி ராமதாஸ் இருக்கிறார்,  பொதுச் செயலாளர் பொருளாளராக  அனைவரும் வரும் 2026 ஆகஸ்ட் மாதம் வரை பொறுப்பில் நீடிக்கிறோம். தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாசை தலைவராக அங்கீகரித்துள்ளதாக கூறப்படுவது பொய் என்றால் எம்எல்ஏ அருள் அதனை அவர் நிரூபிக்க வேண்டும். கட்சியின் நிறுவனரை மாற்றவே முடியாது அவர்தான் கட்சியை உருவாக்கியவர், இனியும் அவர் நிறுவனராக இருந்து எங்களை வழிகாட்ட நாங்கள் தயாராக உள்ளோம். சிலரது பேச்சைக் கேட்டு அவர் நடந்து கொள்வதை ஒத்துக்கொள்ள முடியாது. ஒரு மீடியாவை அழைத்து ஒருவரை செயல் தலைவர் என அறிவிக்க முடியாது, ஒரு மீடியா வழியாக தலைவரை மாற்ற முடியாது, அதற்கான ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்க வேண்டும். அனால்தான் அனைவரும் கொந்தளித்தோம். நிறுவனரை நீக்குவதற்கான முடிவை எடுக்க மாட்டோம்.

திலகபாமா

கட்சியை உருவாக்கி அது இயக்கமாக மாறி மக்கள் கையில் வந்துள்ளது, அதன் பின் பல பேரு தியாகம், உழைப்பு பல பேரின் வழிநடத்தல்கள் எல்லாம் சேர்ந்து இயக்கம் செயல்படுகிறது. ஆகையால் இனி தனி மனிதர் முடிவெடுக்க முடியாது. நான்தான் உருவாக்கினேன் என சொல்ல முடியாது. சட்டம், தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப்படி என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்ய முடியும். கூட்டணி கட்சி சார்ந்த கடிதங்களை கட்சி தலைவர் தான் கொடுக்க முடியும். மருத்துவர் ராமதாஸ் கூட்டணி குறித்த கடிதத்தை கொடுக்க முடியாது, அவர் நிறுவனர் மட்டும்தான் அவர் தலைவர் அல்ல, கூட்டணி குறித்து குறித்து மருத்துவர் ராமதாஸ் பேச முடியாது. கூட்டணி குறித்து தலைவர் அன்புமணி ராமதாஸ்தான் முடிவெடுப்பார். தலைவர் மட்டுமல்ல தலைவர் தலைமையிலான பொதுக்குழுவும் சேர்ந்து கூட்டணி குறித்து முடிவெடுக்கும். நிறுவனர் ராமதாஸை  ஒதுக்கவும் இல்லை, விலக்கவுமில்லை. அவர் மீது மரியாதையும் உழைப்பும் அவரது உழைப்பின் மீது மிகுந்த மரியாதையுடன் உள்ளோம். நிறுவனர் ராமதாஸ் சொல்வதை பொதுக்குழு ஜனநாயக அடிப்படையில் முடிவெடுக்கும். இதிலும் தனிமனித முடிவுகள் செல்லுபடியாகாது. இனிமேல் அன்புமணி ராமதாசை யாரும் நிக்க முடியாது. இதுவரை மருத்துவர் ராமதாஸிடம் சேர்ந்தவர்கள் யாரையும் அன்புமணி ராமதாஸ் நீக்கவில்லை. கட்சிக்கு விரோதம் இழைத்தவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளார்கள்” என்றார்.