அன்புமணி, ஜி.கே.மணி மீது வழக்குப்பதிவு!
Dec 2, 2020, 10:41 IST1606885912000
அன்புமணி ராமதாஸ் , ஜி.கே. மணி உள்ளிட்டோர் மீது காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில் நேற்று பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் பெருங்களத்தூர் அருகே தடுத்து நிறுத்திய நிலையில அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், ரயில் மீது கற்களை வீசி அராஜகம் செய்தனர்.
இந்நிலையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி சென்னையில் நடந்த போராட்டம் தொடர்பாக அன்புமணி மற்றும் ஜி.கே. மணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அருகே தாம்பரம் பம்மல் உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் 3 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நகர் புற நகரில் உள்ள காவல் நிலையங்களில் பாமகவினர் மீது 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.