அந்த வார்த்தையை ஓபிஎஸ் பேசி இருக்ககூடாது; அதனால்தான் மோதல் வந்தது - ஜெயக்குமார் விளக்கம்

 
j

அதிமுகவில் பிரிந்து இருப்பவரை எல்லாம் ஒருங்கிணைத்து கட்சிக்கு பொதுச் செயலாளராக இருந்து செயல்படுவேன் என்று சசிகலா தொடர்ந்து சொல்லி  வரும் நிலையில்,   தேய்ந்த ரெக்கார்டு போல சசிகலா சொல்லிக் கொண்டே இருக்கட்டும் . அதிமுகவிற்கும் அவருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றே தொண்டர்களும் பொதுமக்களும் நினைக்கிறார்கள் என கூறி இருக்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் .

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது,   சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் எந்தவிதமான சட்ட மசோதாவாக இருந்தாலும் அந்த மசோதா மீது கட்சிக்கு ஒருவர் மட்டுமே பேச அனுமதிக்க வேண்டும்.  ஆனால் மரபுகளையும்,  மாண்புகளையும் மீறி ஓபிஎஸ்சை பேச சபாநாயகர் அனுமதித்தது வேதனைக்குரிய விஷயம் என்றார்.

sa

 தொடர்ந்து அதுகுறித்து பேசிய ஜெயக்குமார்,  சட்டப்பேரவையை பொறுத்த வரைக்கும் பெரும்பான்மையின் அடிப்படையில் தான் முடிவெடுக்க வேண்டும்.  ஓபிஎஸ் உட்பட நான்கு பேரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.  அப்படி இருக்கும்போது எந்த அடிப்படையில் சபாநாயகர் அவரைப் பேச அனுமதித்தார் என்பது தெரியவில்லை. 

 ஓபிஎஸ்ஐ பேச அனுமதித்ததன் மூலம் ஜனநாயக மரபுகளை,  மாண்புகளை சீர்குலைத்து இருப்பதாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.   அதிமுகவை சிறுமிப்படுத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சரும் பெறவை தலைவராக நினைத்தால் முதலமைச்சர் ஆளும் பேரவை தலைவராலும் அது முடியாது என்கிறார்.

o

 ஓபிஎஸ் பேசும் வரைக்கும் இபிஎஸ் அமைதியாக தான் இருந்தார்.  அவர் அதிமுக சார்பாக வரவேற்கிறேன் என்று சொல்லும் போது தான் எதிர்ப்பு தெரிவித்தோம். ஓபிஎஸ் அந்த வார்த்தையை தவிர்த்து இருக்கலாம் . அல்லது சபாநாயகர் அந்த வார்த்தையை நீக்குவதாக அறிவித்திருந்தால் இந்த மோதல் ஏற்பட்டு இருக்காது.  அதிமுக என்பது இபிஎஸ் தலைமையில் சிறப்பாக  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  62 சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்களின் தலைமையின் கீழ் தான் ஒற்றுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றவர்,

 ஓபிஎஸ்ஐ தூண்டிவிட்டு குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது திமுக.   திமுகவின் பிடீம் ஆக உள்ளார் ஓபிஎஸ் என்று பொதுமக்களை குற்றம் சாட்டுகிறார்கள் எனச்சொன்ன ஜெயக்குமார்,  அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தேய்ந்த ரெக்கார்டு போல சசிகலா சொல்லிக் கொண்டே இருக்கட்டும்.  அதிமுகவுக்கும் அவருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று தான் தொண்டர்களும் பொதுமக்களும் நினைக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.